Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் உள்ள மேட்டுக்காடு அருகே வசிக்கும் சங்கர் (36) பெருமாயி (60). இவர் தன்னுடைய மகன் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பெருமாயி மற்றும் பேத்தி நிவியாழினி (2) இருவரும் டிவி பார்த்து கொண்டு இருந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு டிவி முழுவதும் தீ பிடித்து எரிந்தது.
மேலும், தீ மளமளவென சுவிட்ச் பாக்ஸ் மற்றும் டியூப் லைட் தீ பிடித்து எரிந்துள்ளத்து. தீயை பார்த்து பதறிப்போன பெருமாயி குழந்தையை எடுத்து கொண்டு வெளியே வந்தார்.
இதை அறிந்த அருகில் உள்ளவர்கள் உடனடியாக வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் வருவதற்குள்ளாகவே மலவென தீ அதிகரித்தது. மேலும் டிவி அருகே இருந்த செல்போன் மற்றும் வாட்ச், ஸ்டெபிலைசர் போன்றவையும் தீயில் கருகியது. உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களே தீயணைப்புத் துறையினர் வரும் முன்னரே தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதில் பெருமாயி மற்றும் நிவி யாழினி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.